Saturday 20 September 2014

கடவுளும் ஒரு நாள் கழிவாகிறார்…


கடையிலிருந்து கடவுளை வாங்குவார்..
கண்ணிலிருந்து துவங்கி கழுத்தின் வழியே..
கால் வரை சென்று..அலங்கரிப்பார்..
கடவுளின் பெயர் சொல்லிக் காரமும் இனிப்பும் செய்வார்..
கனி தருவார்..
கண்ணத்தில் போட்டுக் கொள்வார்..
காரியம் முடிந்ததும்..
கழிவெனக் கூறி…
கடலில் தூக்கி எறிவார்…

கற்பக விநாயகனை…

Thursday 12 September 2013

காந்தி சிரிக்கும் காகிதம்..


முன்ஜென்மத்தில் காகிதங்களும் புண்ணியம் செய்திருக்க வேண்டுமோ??
இச்ஜென்மத்தில் அண்ணல் காந்தி அதில் சிரிக்க??  

இன்று கனவில் நீ வருவாயா??

கண்களை மூடும் கடைசி நொடி..
உன் கைகள் அடித்த வார்த்தைகள்தானடி..
கண்கள் மூடி திறந்துப் பார்க்கையில்…
கனவில் கூட அழகாய் நீயடி..
நித்தம் நீ இப்படி வந்தால் வெளிச்சம் ஆகும் நான் வெறுக்கும் பொருளடி…

நித்திரையில் நீ வந்தால்…
சித்திரையும் குளிருமடி..
முதுகின் பின்புறம் நீ இருக்கையில்…அமர்ந்து இருக்கையில்… நான் முழிக்க முடியவில்லையடி…
உன்னைக் கனவில் கூட காண விரும்புகிறேன்…
இனி இரவில் கூட இன்பமடி..!!
J

Thursday 4 April 2013

நெல்லுமணி உருவாக்கும் கண்ணுமணி


துள்ளித் தாவி நாளாச்சு..-உன்
தாவு தண்ணி தீந்தாச்சு…
மருத நிலம் பாழாச்சு..-அந்தப்
பாலைக்குப் போட்டியா வந்தாச்சு…
வானத்துல கருமை காணலயே..-அந்த
சாமிக்கும் இது தோணலயே…
குளமெல்லாம் குட்டையா பொயிட்டுதே…-உன்
கண்ணுலதான் உப்பு நீரு ஊறிட்டுதே….
வெசமும் தான் உன் விசனம் அறியுமடா…-நீ
தூக்கிட்டா அந்தத் தாம்புக் கயிறும் அழுவுமடா…
கல்லு மண்ணு சேத்து பாலம் கட்டுறவங்களே…-இவன்
நிலம் எல்லாம் பாலமா வெடிப்பு விட்டக் கதைக் கெளுங்களேன்…
காலம் ஒண்ணு வருமடா என் தங்கமணி….- உன்
காலுக்கடியில் சனம் விழுமடா என் செல்லமணி…
மூட்டை மூட்டையா குவிச்ச நீ நெல்லுமணி…
நெசம் ஒரு நாள் புரியுமுடா என் கண்ணுமணி…

Wednesday 26 December 2012

மனித மனம் ஓர் எறும்பு !


மனிதனின் மனமும் எறும்பு ஒன்றுதான்
இனிமையை மட்டுமே தேடிச்செல்லும்…
இடையில் வேறு சுவையை கண்டால் வெறுத்து ஒதுக்கும்…
எதையோ மறந்தேனோ???
ஆம்…
மனிதனின் மனமும்
எறும்பு ஒன்றுதான்….
அளவிலும் கூட…!!!

Wednesday 21 November 2012

Best BuDDieS



Ur
A dew on  rose buds to see…
So made a word from “I” to “We”…
Ur
A sweet fragrance of a Jasmine to smell…
Which even converted my life to Heaven from Hell…
Ur
A luvly melody always to hear..
When you are near…
I don’t  have to utter a word of fear…
My dear…

Ur always  the best of my buddies

Who made my useless things to useful goodies J

Monday 19 November 2012

“எழுச்சி பெறுவாய் இளைஞனே”


                          
எழுச்சி பெற்று வா!
ஏற்றம் காண்போம் வா!
இடர்கள் களைந்து வா!
இந்தியன் நீயே வா!
இளைஞனும் நீயெ வா!

எறும்பு ஊரிடதான்!
உரத்த கல்லும் தேயும் பார்!
எறும்பு அல்லவே நீ!
கணத்த இரும்பு அல்லவோ நீ!

ஊரிடம் உனக்கென்று மதிப்புண்டு!
உன் நரம்பிலும் உடம்பிலும் துடிப்புண்டு!
பல உலக நாடுகளில் நடிப்புண்டு
உன் ஏடுகளில் மட்டுமே சிறந்த படிப்புண்டு
இந்தியத் தாயின் பிடிப்புண்டு-அதற்கு
இன்னல் தவிர்க்கும் திறம் உண்டு
இளமை என்னும் பலம் கொண்டு- நீ
திறமை வளர்த்து வா நெஞ்சுரம் கொண்டு

வாழ்ந்து காட்டுவாய் உனக்காக-என்றும்
வீழ்ந்து விடாதே பிறர்காக
தங்கம் எறிப்பது எதற்காக-அது
அணி நகையாய் மாறிடுமே அதற்காக……….!!